யோக சித்தி
வரங்கேட்டல்
தேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரைகூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பலவேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனிஎன்னைப் புதிய வுயிராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து -- மதிதன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
தோளை வலியுடைய தாக்கி -- உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரிவாளைக் கொண்டுபிளந் தாலும் -- கட்டு மாறா வுடலுறுதி தந்து -- சுடர்நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி நண்ணித் திகழுமுகந் தந்து -- மதவேளை வெல்லுமுறை கூறித் -- தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.
எண்ணுங் காரியங்க ளெல்லாம் -- வெற்றி யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவைநண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பலபண்ணிற் கோடிவகை இன்பம் -- நான் பாடத் திறனடைதல் வேண்டும்.
கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றி்ப் போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணைவெல்லத் தினிப்புவரச் செய்தல் -- என விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி் சூழும் வீரமறி வாண்மை
கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல் கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவைநாடும் படிக்கு வினைசெய்து -- இந்த நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் -- கலிசாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி தாயே உனக்கரிய துண்டோ? -- மதிமூடும் பொய்ம்மையிரு ளெல்லாம் -- எனை முற்றும் விட்டகல வேண்டும்;
ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை அச்சம் போயொழிதல் வேண்டும் -- பலபையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப் பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னைஉய்யக் கொண்டருள வேண்டும்-அடி உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி்வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை வாழி, நின்னதருள் வாழி.ஓம் காளி வலிசாமுண்டீ ஓங்காரத் தலைவி என்இராணி.
குறிப்பு: இப்பாடல்களில் வரும் காளி, சக்தி, மாரி முதலியன உலகத்தின் மூலசக்தியைக் குறிக்கும் பெயர்களாம்.
யோக சித்தி
வரங்கேட்டல்
தேடிச் சோறுநிதந் தின்று -- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து -- மதி
தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
தோளை வலியுடைய தாக்கி -- உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் -- கட்டு
மாறா வுடலுறுதி தந்து -- சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து -- மத
வேளை வெல்லுமுறை கூறித் -- தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.
எண்ணுங் காரியங்க ளெல்லாம் -- வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக
நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பல
பண்ணிற் கோடிவகை இன்பம் -- நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.
கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றி்ப்
போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் -- என
விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி்
சூழும் வீரமறி வாண்மை
கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவை
நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் -- கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி
தாயே உனக்கரிய துண்டோ? -- மதி
மூடும் பொய்ம்மையிரு ளெல்லாம் -- எனை
முற்றும் விட்டகல வேண்டும்;
ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல
பையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை
உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி்
வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை
வாழி, நின்னதருள் வாழி.
ஓம் காளி வலிசாமுண்டீ
ஓங்காரத் தலைவி என்இராணி.
குறிப்பு: இப்பாடல்களில் வரும் காளி, சக்தி, மாரி முதலியன உலகத்தின் மூலசக்தியைக் குறிக்கும் பெயர்களாம்.
0 Comments